ஆடு திருடிய 2 பேர் கைது

திருப்பூர், ஜன. 11: திருப்பூர் ஊத்துக்குளி அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூர், ஊத்துக்குளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் ஒரு ஆட்டுடன் சந்தேகப்படும் படியான இருந்துள்ளனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது முண்ணுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் முதலிபாளையம் ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்த குணசேகரன் (20), அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குணசேகரன் (18) என்பது் தெரியவந்தது. அவர்கள் இருவரும் ஊத்துக்குளி பாப்பம்பாளையம் பகுதியில் லோகநாதன் (45) என்பவருக்கு சொந்தமான ஆட்டை திருடிக்கொண்டு விற்பனைக்கு சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: