திமுக தலைவர் பங்கேற்கும் மக்கள் கிராமசபை கூட்டம்

பள்ளிபாளையம், ஜன.11: பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை கிராமத்தில், கடந்த 8ம்தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருந்த மக்கள் கிராமசபை கூட்டம், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த கூட்டம் வரும் 19ம்தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக பாதரை கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் உள் மற்றும் வெளி அரங்கம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, அரங்கம் அமைக்கும் பணிகளை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், குமாரபாளையம் நகர பொறுப்பாளர் செல்வம், பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் பொறுப்பாளர்கள் கார்த்திராஜ், ராமமூர்த்தி, நிர்வாகிகள் வேல்முருகன், ரவி, ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடாஜலம் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

Related Stories: