கிருஷ்ணகிரி, ஜன.11: கிருஷ்ணகிரி அருகே, தலையில் கல்லை போட்டு எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே கொண்டேப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி(44), எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம், வீட்டில் இருந்து தனது டூவீலரில் வெளியே சென்றவர், மாலையில் பாஞ்சாலியூர் அருகே செங்கல் சூளையில் உள்ள மரத்தின் கீழ், தலையில் கல்லை போட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தார். தகவலின் பேரில், சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், கொலையான திருப்பதிக்கு, பூசாரிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி(37) என்பவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.