திருச்சி, ஜன.11: திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு 2020-2021ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இக்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு 2019-2020ம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.