தலைஞாயிறு பகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

வேதாரண்யம், ஜன.11: நாகப்பட்டினம் தொழிலாளர் நலத்துறை சார்பில் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் அவை பாலசுப்பிரமணியன், வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் தங்க கதிரவன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் ஜெனட், உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: