கரூர், ஜன. 11: குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் பயனாளிகள், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கரூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஆர்ஓ தொிவித்தார். குடியரசு தின விழாவினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,ஆண்டுதோறும் ஜனவரி 26ம்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை நல்ல முறையில் பராமரித்து சீர் செய்து வழங்கும் பணியை நகராட்சித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் தீத்தடுப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையினர் அவசர ஊர்தியை பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.