திருவில்லிபுத்தூர் அருகே மழைநீர் சூழ்ந்த பகுதியில் திமுக எம்எல்ஏ ஆய்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

திருவில்லிபுத்தூர், ஜன.11: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கே.தொட்டியபட்டி கிராமத்தில் கொத்தங்குளம் கண்மாய் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர்மழையால் இந்த கண்மாய் நிரம்பி வெளியேறிய நீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.

அப்பகுதியை ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன், திருவில்லிபுத்தூர் யூனியன் சேர்மன் மல்லி ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு அரிசி, கோதுமை. ரவை போன்ற பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். மேலும் அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளையும் செய்தனர்.

Related Stories: