பழநி, ஜன.11: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான பிரட் பாக்கெட்டுகள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. பழநி நகரில் ஏராளமான பேக்கரிகள் உள்ளன. இப்பேக்கரிகளில் பிரட், பிஸ்கட், கேக், இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பல பேக்கரிகளில் தற்போது காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி போன்றவை தற்போது குறிப்பிடப்படுவதில்லை. படிப்பறிவில்லாத கிராம மக்கள், இதனை அறியாமல் வாங்கிச் சென்று சாப்பிடுகின்றனர். இவற்றில் பல காலாவதியான பொருட்கள் என புகார் கிளம்பின. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.