கோவை, ஜன.7: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (29). தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி ருபானா(25). கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கார்த்திக் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் மதியம் ருபானா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் குக்கரில் விசில் போடாமல் சமையல் செய்துள்ளார். சாப்பாடு கருகி போய் வாசம் வீசியது. இதை பார்த்த ருபானாவின் தாய், திருமணமாகி விட்டது, இப்படி சமையல் செய்தால் எப்படி என கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ருபானா வீட்டில் தூக்கு போட்டு இறந்தார்.இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது. இடையர்பாளையம் நீலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காயத்ரி (28). இவருக்கு 5 ஆண்டிற்கு முன் திருமணம் ஆனது. ஒரு மகள் உள்ளார். கணவரை பிரித்து 3 மாதமாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.