சென்னை: உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் கோவை வந்து சென்ற ஈரம் காய்வதற்குள் நெல் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணத்தை அளிக்கவில்லை. நெல் ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள். ஈரப்பதம் அளவு அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை?. தமிழ்நாடு விவசாயிகளின் அழுகுரல் பிரதமருக்கு ஏன் கேட்கவில்லை?, கண்ணீர் ஏன் தெரியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கை நிராகரிப்பு; தமிழ்நாடு விவசாயிகளின் அழுகுரல் பிரதமருக்கு ஏன் கேட்கவில்லை?, கண்ணீர் ஏன் தெரியவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- X
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- கோயம்புத்தூர்
