பஞ்.செயலர்கள் சங்க கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.7:  பர்கூர் அடுத்த ஐகுந்தம்கொத்தப்பள்ளியில் ஊராட்சி செயலாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், ஒன்றிய தலைவர் மாதலிங்கம் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் பரசுராமன், பொருளாளர் சசி, ஒன்றிய அமைப்பாளர் சங்கரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராஜகணேசன் வரவேற்றார். மாவட்ட தலைவர் செங்கதிர்செல்வன், இணை செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை அரசாணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் பூர்ணிமா நன்றி கூறினார்.

Related Stories: