நீடாமங்கலம், ஜன.7: திருவாரூர் மாவட்ட அளவிலான அனைத்து திமுக ஊராட்சி தலைவர்கள் கூட்டம் கொரடாச்சேரியில் நேற்று நடந்தது. மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ., ஆடலரசன் முன்னிலை வகித்தார். செல்லத்துரை வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கொரடாச்சேரி தெற்கு பாலச்சந்திரன், வடக்கு சேகர், மன்னார்குடி கிழக்கு குமரேசன், கோட்டூர் ஞானி உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ பேசுகையில், உள்ளாட்சியில் பதவி ஏற்று ஓராண்டு இன்று (நேற்று) நிறைவு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். தற்போது சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஊராட்சிகளில் உயர்கோபுர விளக்கு, ஆர்ஓ வாட்டர் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.