திருவாரூர், ஜன.7: திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் நாளை (8ம் தேதி) பொது ஏலத்தில் விடப்படுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 30, இரண்டு சக்கர வாகனம் 146 மற்றும் 3 சக்கர வாகனம் ஒன்று என மொத்தம் 177 வாகனங்களுக்கான பொது ஏலமானது கடந்த மாதம் 3ம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அன்றைய தினம் ஏலம் போகாத 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 27 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்களுக்கு மீண்டும் பொது ஏலமானது நாளை (8ம் தேதி) நடைபெறுகிறது.