நோயால் வேதனை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஜன.7: திருச்சி திருவானைக்காவல் தெற்கு உள்வீதியை சேர்ந்தவர் ஆனந்த்(31). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்று நோயால் அவதிபட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 4ம்தேதி இவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் ரங்கம் எஸ்ஐ மோகன்ராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: