ஆவடி: திருநின்றவூர் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி(45). சமூக ஆர்வலர். இவருக்கு ஆவடி அடுத்த கோயில்பதாகை அண்ணா வீதியில் காலி மனை உள்ளது. கடந்த நவம்பர் 6ம் தேதி கலைச்செல்வி மனைக்கு சொத்துவரி செலுத்தவதற்காக ஆவடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் துறையில் விண்ணப்பம் கொடுத்திருந்தார். மேலும், இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி(51) என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வரிபோட்டு தருவதாக கூறியுள்ளார். மேலும், அவர் புரோக்கர் வின்சென்ட்(30) என்பவரிடம் பணம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதுகுறித்து கலைச்செல்வி, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி சீனிவாசப்பெருமாளிடம் புகார் செய்தார்.