மாங்காடு ஊராட்சியில் மக்கள் கிராமசபை கூட்டம்

புதுக்கோட்டை, ஜன. 6: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட மாங்காடு ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. மாங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக அரசு நிராகரிப்பு தொடர்ந்து பொதுமக்களிடம் அதிமுக அரசின் குறைகள் கேட்கப்பட்டன. பின்னர் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பேசுகையில், அதிமுகவை நிராகரித்து விட்டு அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக அமர்த்தியே தீருவோம் என்றார். கூட்டத்தில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான இளங்கோவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள், பெண்கள் பங்கேற்றனர்.

Related Stories: