புதுக்கோட்டை,ஜன.6: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஇஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தெரிவித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலக கட்டிடத்தில் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார்.மாநில தீர்ப்புக் குழு உறுப்பினர் கண்ணன்,மாவட்ட மூத்தோரணி அமைப்பாளர் ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் செல்வராசு வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் பேசுகையில், ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்குபெற்ற ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீது பழிவாங்கிடும் வகையில் புனையப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள் ,தொடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஇஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் தகவல்
- ஆர்ப்பாட்டம்
- அலுவலகம்
- தலைமை நிர்வாக அதிகாரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பொது செயலாளர்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் சபை