நாகை, ஜன. 6: கிராம நிர் வாக அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிடக்கோரி நாகை தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஹமித் பாஷா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவராஜ், திருமருகல் சரக பொறுப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகி த்தனர். மாவட்ட தலைவர் கலியபெருமாள் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை கைவிட்டு விட்டு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.