திருப்புத்தூர், ஜன.6: திருப்புத்தூரில் பெற்றோர் திட்டியதால் பினாயில் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்புத்தூர் காளையப்பா நகரைச் சேர்ந்தஅழகு மகன் முத்து கிருஷ்ணன்(19). இவர் சிவகங்கையில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தொடர்ந்து செல்போன் வைத்திருந்ததால், அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்துள்ளார்.