ஆர்.எஸ்.மங்கலம், ஜன.6: பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வந்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றன்னர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கிழக்கு கடற்கரை பகுதிகளான திருப்பாலைக்குடி, சம்பை,தேவிபட்டினம், சித்தார்கோட்டை, பனைக்குளம், மோர்ப்பண்ணை உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரிமடம், நதிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கி, உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளன. உப்பு உற்பத்திக்கு ஏற்ற சீதோஷண நிலை இல்லாததாலும், உப்பளங்களில் உள்ள பாத்திகளில் மழைநீர் தேங்கியதாலும் உப்பு உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் அங்கு பணி செய்யும் உப்பள தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்துள்ளனர்.