மதுரை, ஜன. 6: மதுரை சர்வேயர்காலனியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரராஜ் நேற்று கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அம்மனுவில், ‘மதுரை மாவட்டம் மேலூர் முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கீழவளவு, இ.மலம்பட்டி, கோவில்பட்டி, கொங்ககம்பட்டி விலக்கு உள்ளிட்ட பல இடங்களில் ரோடு சிதைந்து பெரிய அளவில் பள்ளம் மேடாக உள்ளது. பல மாதமாக இருந்த இந்த பள்ளம் தற்போது பெய்து மழைக்கு மேலும் கூடுதல் பள்ளமாக மாறிவிட்டது.