கோவை, ஜன. 6: கோவை மேற்கு மண்டலம் ஆரோக்கியசாமி சாலையில் செயல்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் நிலையம் மற்றும் தடாகம் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த உடற்பயிற்சி கூடம் ஆகிய 2 கடைகளும் 6 மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் இந்த 2 கடைகளையும் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.