கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வரும் கார், லாரி, வேன், உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தனிப்பிரிவு காவலர் நாராயணன், உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த நெல்லூர் - சென்னை செல்லும் அரசு பேருந்தை மடக்கினர். தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரையும் கீழே இறக்கி சோதனையிட்டனர்.