உடுமலை, ஜன. 5: உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, விலையில்லா வேட்டி,சேலை மற்றும் ரூ.2500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 666 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை கொண்ட சிறப்பு பொங்கல் பரிசு ரூ.199.65 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. என்றார்.