அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற 16 பேர் கைது

ஊட்டி,ஜன.5: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஊட்டி மார்க்கெட் அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ., கட்சியினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி எஸ்டிபிஐ., சார்பில் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல்லா தலைமையில் ஊட்டி மார்க்கெட் அஞ்சலத்தை முற்றுகையிட முயன்றனர். முற்றுகையிட முயன்ற 16 பேைர போலீசார் கைது செய்தனர்.

Related Stories: