கோவை, ஜன.5 : கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரா 2021’ நிகழ்ச்சியின் 4-ம் நாள் விழா ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலை பள்ளியின் சரோஜினி நடராஜ் களையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பாடகர் சுசித்ரா பால சுப்ரமாணியன் கலந்து கொண்டு கிருஷ்ணரை பற்றியும் மற்றும் அவர் பக்தையான மீராபாய் பற்றியும் பேசினார். இவ்விழாவில் பாடகி சுசித்ரா பால சுப்ரமாணியன் பேசியதாவது, ‘ மீராபாய் பாய் ரஜபுத் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணர் மீது தீராத அன்பும் பற்றும் கொண்டவராக இருந்தார். இது மட்டும் இன்றி சமையல், வாள் சண்டையில் சிறந்து விளங்கினார். மன உறுதியோடும், யாருக்கும் பயப்படாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியுள்ளார். தற்பொழுது நமது பெண் பிள்ளைகளை எப்படி துணிவோடு வளர்க்கவேண்டுமோ, அதற்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளார்.