திருச்சி, ஜன. 5: திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் ரசூல் முகமது (45). இவர் அப்பகுதியில் சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். திடீர் நகரை சேர்ந்தவர் குமரேசன் (25). கூலித்தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நண்பருடன் ரசூல்முகமது மளிகை கடைக்கு சென்ற குமரேசன், கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளார். அப்போது கடன் எல்லாம் கொடுக்க முடியாது என ரசூல் முகமது கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் குமரேசன் தகராறில் ஈடுபட்டது குறித்து அவரது முதலாளியான லோகநாதனிடம் கூறி கண்டிக்குமாறு ரசூல்முகமது கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், இரவு ரசூல்முகமது வீட்டுக்கு சென்று மிரட்டியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ரசூல்முகமது மளிகை கடை தீப்பற்றி எரிய துவங்கியது.