சின்னாளபட்டி, ஜன.5: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு முடக்குகிறது என்று, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பாக கொத்தப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட தாதங்கோட்டையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் காளீஸ்வரி மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசுகையில், கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு முடக்கி வருகிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்தபின்பு சாலைவசதி, தண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது.