பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் 9 மாதங்களுக்கு பிறகு உற்சவர் வீதி உலா

பள்ளிகொண்டா, ஜன.5: 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் உற்சவர் நேற்று வீதிஉலா வந்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடபட்டது. இதனால், அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் தியேட்டர்கள் மற்றும் கோயில்கள் என அனைத்தும் மூடபட்டது. தொற்று குறைந்து வருவதால் குறிப்பிட்ட கோயில்களில் மட்டும் திருவிழாக்கள் நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் 9 மாதங்களுக்கு பிறகு உற்சவர்கள் முக்கிய வீதிகளில் உலா வந்தார். காலை மற்றும் மாலை உற்சவர் மற்றும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 9 மாதங்களுக்கு பிறகு சுவாமி வீதி உலா வருவதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வழிப்பட்டனர்.

Related Stories: