கிருஷ்ணகிரி, ஜன.4: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தேவசமுத்திரம் மற்றும் கீழ்புதூர் கிராமங்களில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்விபாஸ்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில், கே.பி.முனுசாமி எம்பி மற்றும் சுகாதரா பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி மினி கிளினிக்கை திறந்து வைத்தனர்.