திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதன்மை தேர்வு 13 மையங்களில் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 132 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 457 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மீதி 2 ஆயிரத்து 675 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை. திருவள்ளூர் தாலுகா, அரண்வாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வினை கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.