துறையூர், ஜன.4: துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.01 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. துறையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு கோட்டாத்தூர், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், மண்பறை, வாலீஸ்புரம், து.களத்தூர், அம்மாபட்டி, கீழக்குன்னுப்பட்டி, கோணப்பாதை, திருத்தலையூர், கொல்லப்பட்டி, நடுவலூர், நாகலாபுரம், அம்மம்பாளையம், வடக்கு நல்லியம்பட்டி, வெங்கடாசலபுரம், புலிவலம், ஒக்கரை, கிருஷ்ணாபுரம், முசிறி, ஆலத்துடையான்பட்டி, சேர்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 770 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலத்தில் விற்பதற்காக கொண்டு வந்தனர்.