திருவெறும்பூர், ஜன.4: திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதற்கு இடம் மற்றும் நிதி ஒதுக்காத தமிழக அரசையும், உள்ளாட்சி துறையையும், பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., இணைந்து பெல்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய நிர்வாகி ரவி தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் பீர்முகமது, சாலமன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் நடராஜன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் இளையராணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.