பெரம்பலூர்,ஜன.1:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் வெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்றபோது பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆ லத்தூர் தாலுகா, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் கிராமங்களில் நேற்று கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களின் போது பெறப்பட்ட படிவங்களின் தன்மை குறித்து வீடு வீடாக சென்று விசாரணை செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி, ஜனவரி 1ம்தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அ னைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திரு த்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப் பங்களை பெற்றிட சிறப்பு முகாம் நடைபெற்றது.