நாகை, ஜன.1: ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் கூடுவோர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடநத மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கடற்கரைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவது ஆகியவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் நாகை மாவட்டத்தில் நடத்தப்படவில்லை.