தூத்துக்குடி, டிச.31: தூத்துக்குடியில் அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி சிதம்பரநகரிலுள்ள அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளரும், ஆவின் சேர்மனுமான என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேசிய நிர்வாகிகள், சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான செல்லப்பாண்டியனுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கிடவேண்டும். இல்லாதபட்சத்தில், இது தொடர்பாக வரும் 2ம்தேதி தூத்துக்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுப்பது என்பது குறித்தும் விவாதித்தனர்.