உடன்குடி பகுதியில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு

உடன்குடி, டிச. 31:  உடன்குடி ஒன்றிய, நகர திமுக சார்பில் மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, தேரியூர், பெரியதெரு, வில்லிகுடியிருப்பு, நயினார்பத்து ஆகிய இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.உடன்குடி யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலருமான பாலசிங் தலைமை வகித்தார். நகர செயலர் ஜான்பாஸ்கர் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளரணி மகாவிஷ்ணு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் மாணவரணி முகைதீன், மகேந்திரன், வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, ஆனந்த், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சலீம், காசிம், மகபூப், செட்டியாபத்து பஞ்.தலைவர் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப்அலி பாதுஷா முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மக்களிடம் குறைகளைக் கேட்டு வரும் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்க துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். மக்களுக்கு விரோதமாக செயல்படும் அரசை அகற்றி ஸ்டாலின் முதல்வராக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். இதில் மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர்,  மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், நகர அமைப்பாளர் அஜய், நகர வர்த்தக அணி அமைப்பாளர் அப்துல்ஹமீது, மாவட்ட  துணை அமைப்பாளர்கள் நெசவாளரணி கிருஷ்ணகுமார், சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு ஷேக் முகம்மது, சிராஜூதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: