கோவா: சூப்பர் கோப்பை 2025-26 கால்பந்து தொடரில் நேற்று, குரூப் சி பிரிவில் கோகுலம் கேரளா எப்சி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பஞ்சாப் எப்சி அணி 3 கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. குரூப் டி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் ஸ்போர்டிங் கிளப் டெல்லி – மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி 4 கோல்கள் போட்டனர். பதிலுக்கு டெல்லி அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால், 4-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
