கரூர், டிச. 30: கரூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தகவல் மையம் செயல்பாடு இல்லாத காரணத்தினால் நகராட்சிக்கு வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் ஆசாத் சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி கூட்ட அரங்கம் உட்பட அனைத்து அலுவலகங்களும் ஒரே அரங்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக ரூ. 7கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது. பணிகள் முடிந்து, கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு கரூருக்கு ஆய்வு பணிகளுக்காக வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வந்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.