தொழில்வரி கடைகளுக்கு லைசென்ஸ் தள்ளுபடி செய்ய வேண்டும்

கரூர், டிச. 30: தொழில்வரி கடைகளுக்கு லைசென்ஸை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சங்கத் தலைவர் கந்தசாமி, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சுப்பிரமணி ஆகியோர்கள் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கருர் நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் வழங்கிய மனுவில் ரிவித்துள்ளதாவது:

முடித்திருத்தும் தொழில் எங்களுக்கு குலத்தொழிலாக உள்ளது. எனவே, தொழில் வரி கடைகளுக்கு லைசென்ஸை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: