வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் மனு

விருதுநகர், டிச. 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் பழங்குடியின மலைக்குறவன் சமுதாய மக்கள் அளித்த மனுவில், திருவில்லிபுத்து£ர் அருகே பிள்ளையார் நத்தம் இந்திராநகர், திருவள்ளுவர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்த மக்கள் வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். சொந்த நிலம், வீடு எதுவும் இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம். இதுவரை எவ்வித அரசு சலுகையும் பெறாதா நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories: