வத்தலகுண்டு, டிச. 30: வத்தலகுண்டு அருகே, விருவீடு பகுதியில் கள்ளக்காதல் தகராறில் பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் உள்ள சந்தையூர் ஊராட்சி ராஜாதானி கோட்டையைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ரேகா (42). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் லோகநாதன் இறந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருவீடு அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகனுடன் (43), விவசாய வேலைக்கு சென்றபோது ரேகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. முருகனுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே சில மாதமாக பையன் வளர்ந்துவிட்டான் இனி நமது பழக்கத்தை நிறுத்திக் கொள்ளலாம் என முருகனிடம் ரேவதி தெரிவித்துள்ளார். மேலும், பணம் கேட்டதாக கூறப்படுகிறது.