டிரைவருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளிக்கு வலை

நெல்லை, டிச. 30:  விகேபுரம் டாணா பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணிராஜ் (45). இவர் உள்பட 4 பேர் நெல்லை வண்ணார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்றிரவு வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் அந்தோணிராஜ் குளிக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்வம் (30) செலவிற்கு பணம் கேட்டு அந்தோணிராஜை மிரட்டினார். அப்போது பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்வம் அரிவாளால் அந்தோணிராஜை வெட்டி விட்டு தப்பி சென்றார். பின்னர் வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த பாளை போலீசார் தாமிரபரணி ஆற்றங்கரையில் முட்புதரில் பதுங்கியிருந்த செல்வத்தை கைது செய்தனர்.

Related Stories: