வேலூர், டிச.30: வேலூர் மண்டல வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. தொடர்ந்து, இன்று காவலர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வேலூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு தற்காலிகமாக பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி பட்டியல் எழுத்தருக்கான நேர்முகத்தேர்வு வேலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை மண்டல மேலாளர் நாகராஜன் தலைமையில், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், மகேஷ், குப்புசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.