மழை கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வாசன் கோரிக்கை

சென்னை: தமாக தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடும் மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்திருக்கிறது. . ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களையும், விவசாய மக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தக்க நேரத்தில் உதவிக் கரம் நீட்டும் வகையில் பருவமழை கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக நியமனம் செய்து அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Related Stories: