நாளை மேலநத்தத்தில் திருவாதிரை சப்பர பவனி

நெல்லை, டிச. 29: மேலநத்தம் சிவன் கோயில் திருவாதிரை திருவிழாவில், நாளை (30ம் தேதி) காலை சப்பர பவனி நடக்கிறது. மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தில் மேற்கு பார்த்த நிலையிலுள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நாளை (30ம் தேதி) காலை அதிகாலை 3 மணி முதல் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த தாண்டவரேஸ்வருக்கு தனுர்மாத ஆருத்ரா அபிஷேகம், கோ பூஜை, ஷோடச தீபாராதனை, ஆருத்ரா தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் சப்பர பவனி நடக்கிறது.

Related Stories: