திருப்பூர், டிச.27: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை வர்த்தகம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) செயற்குழு உறுப்பினர் குமார் கூறியதாவது: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை வர்த்தகத்தில் அசாதாரண சூழல் உருவாகி வருகிறது. அந்நாட்டு வர்த்தகர்கள் மிக முக்கியமானதாக கருதப்படும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆடை வர்த்தகத்தை பெருமளவு இழந்துள்ளனர்.