புதியம்புத்தூரில் எம்ஜிஆர் நினைவு தினம்

ஓட்டப்பிடாரம், டிச. 27: புதியம்புத்தூரில் எம்ஜிஆரின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. புதியம்புத்தூரில் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ஆறுமுகசாமி, அணி செயலாளர் ராஜேஷ், புதியம்புத்தூர் நகர செயலாளர் ஆறுமுகசாமி, நடுவக்குறிச்சி சுப்பிரமணியன், பொன்ராஜ், தங்கமாரியப்பன், முத்துராஜ், ஆனந்தகுமார் உள்ளிட்ட   பலர் பங்கேற்றனர்.

Related Stories: