கயத்தாறு டிச,27:கயத்தாறு, ேகாவில்பட்டி பகுதியில் ரூ.1.78 கோடி திட்டப்பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பராமரிப்பு நிதி 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்கவும், மூலதன மானிய நிதி 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் புதிய ஆழ்துளைகிணறு அமைத்தல், குடிநீர் பைப்லைன் விஸ்தரிப்பு போன்ற திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிஆர்ஓ சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குற்றாலிங்கம் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் வாசுதேவன், கோவில்பட்டி ஆர்டிஓ விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வேலுமணி, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், விவசாயப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் முருகேசன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தங்கபாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுடலை, இலக்கிய அணி பாலகணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன், வேல்முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு நன்றி கூறினார்.