ஈரோடு, டிச.27: தேசிய இளைஞர் விழாவையொட்டி மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள் மெய்நிகர் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகிறது.இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, இவ்விழாவினை மெய்நிகர் முறையில் நடத்துவது என முடிவு செய்துள்ளது.